Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா ஏன் தாமதம்... விளக்கம் கேட்டு டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் வேங்கை ஐ.பிரகாஷ்ராஜ் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செய்யது முகமது என்ற வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

Court raps TN government for delay in installing cameras at police stations

போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் ஏராளமாக நடக்கிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்றும், அந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்து, அந்த அதிகாரிகள் கண்காணிக்கும்படி உத்தரவிட வேண்டும்' என்று அவர் கூறியிருந்தார்.

இதேபோல, ஏ.நாராயணன் என்பவரும் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக டி.ஜி.பி. சார்பில், ஐ.ஜி. எஸ்.டேவிட்சன் ஆசிர்வாதம் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்துகள் எதுவும் இல்லை. டி.கே.பாசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘நாகரீகம் அடைந்த ஒரு நாடு, தன்னுடைய குடிமக்களை துன்புறுத்தாது என்று கருத்து கூறியுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால், தனக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போலீசார் வழங்கவில்லை என்பதை ஒருவரால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்' என்றும் கருத்து கூறியுள்ளது.

இதனால், தமிழக அரசு போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுகுறித்து, 2013-2014-ம் ஆண்டு காவல்துறை மானியம் மீதான விவாதத்தில் பதில் அளித்த தமிழக முதல்-அமைச்சர், தமிழகத்தில் 251 போலீஸ் நிலையங்களில் முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த திட்டத்துக்கான பரிந்துரை தமிழக அரசுக்கு, 2013-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி காவல்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 1,567 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 251 போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து, அதில் ரூ.1.75 கோடி செலவில் கேமரா பொருத்த தமிழக உள்துறை செயலாளர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி அரசாணை பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.56 கோடிக்கு கேமராக்கள் வாங்கப்பட்டு, பொருத்தப்பட்டு வருகிறது. இதுவரை 251 போலீஸ் நிலையங்களில் 170 போலீஸ் நிலையங்களில் கேமராபொருத் தப்பட்டுவிட்டது. சென்னையில் 11 போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது, ஆனால் இதுவரை ஒரு போலீஸ் நிலையத்தில்கூட கேமராவை பொருத்தவில்லை. கோவையில் 20 போலீஸ் நிலையங்களில், 17 போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்தப்பட்டுவிட்டது. கேமரா பொருத்தப்படாத போலீஸ் நிலையங்களில், அப்பணி விரைவாக மேற்கொள்ளப்படும்.

எனவே, மனுதாரர்களின் கோரிக்கைகள், தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறப்படுகிறதா? என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கவுரவமாக நடத்தப்படுகின்றனர். போலீசாருக்கு, பொதுமக்களின் நலன் மீது அக்கறை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

காவல் துறையில் 2013-14-ம் ஆண்டுக்கான கோரிக்கையின் அடிப்படையில் 251 போலீஸ் நிலையங்களில், 170 போலீஸ் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. 10 ஆண்டு திட்டத்தை நிறைவேற்றுவதுபோல், கேமரா பொருத்தும் திட்டத்தை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர். அதே நேரம், போலீஸ் நிலையங்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது என்பதை டி.ஜி.பி. விளக்கவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே, இதுகுறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கின்றோம்' என இவ்வாறு

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+