இசக்கி கொலை வழக்கு: வெங்கடேஷ் பண்ணையார் தம்பி சுபாஷ் பண்ணையார் விடுதலை
தூத்துக்குடி: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை கொலை செய்ய நடந்த முயற்சியில் பொன் இசக்கி என்பவர் கெலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் உட்பட 3 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு தூத்துக்குடியில் சிதம்பரநகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அந்தத் தாக்குதலில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் சோரீஸ்புரத்தை சேர்ந்த பொன் இசக்கி என்பவர் வெட்டி கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக தூத்துக்குடி தெற்கு போலீசார் வெங்கடேஷ் பண்ணையார், அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு.தூத்துக்குடி கூடுதல் அமர்வு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வெங்கடேஷ் பண்ணையார், ஏற்கனவே போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு விட்டார். சுபாஷ் பண்ணையாரும் நீண்ட நாட்கள் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால் ஒரு தரப்பினர் தங்கள் மீது போடப்பட்ட வழக்கினை தனியாக விசாரிக்க கோரினர். இதன் பேரில் அதில் பலர் விடுவிக்கப்பட்டனர். இறுதியாக சுபாஷ்பண்ணையார், சேகர், ஹரி ஆகிய மூன்று பேர் மீதுள்ள வழக்கு மட்டும் முடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில்தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் ஆஜரானதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிவடைந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கமலாவதி, அரசு தரப்பு சாட்சி யங்கள், சரிவர நிரூபிக்கப்படாததால் சுபாஷ் பண்ணையார் உட்பட மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications