அக்னி வெயிலிலும் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்.... மக்கள் ஆனந்த குளியல்
மேற்குத்தொடர்ச்சி பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. மக்கள் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
குற்றாலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவிகளில் கொட்டும் தண்ணீரில் கோடை விடுமுறையை கொண்டாட வந்துள்ள பயணிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியது. இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நன்றாக மழை பெய்துள்ளது.

இடி மின்னலுடன் மழை
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இடி,மின்னலோடு பலத்த மழை பெய்தது. மாலை 4.45 மணி முதல் வானம் கருத்து திடீர் இடி,மின்னலோடு பலத்த மழை பெய்தது.

அருவிகளில் தண்ணீர்
இதன் காரணமாக செங்கோட்டை, பண்பொழி, புளியரை, தென்காசி,குற்றாலம், ஐந்தருவி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவி,ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரிப்போடு கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள்
காலை முதல் குற்றாலம் மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. ஆண்களும், பெண்களும் பரவலாக விழும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனந்த குளியல்
அக்னி நட்சத்திரம் காலமான கோடை வெயில் கொளுத்தும் இந்த சமயம் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் கோடை விடுமுறையை கழிக்கும் பள்ளி குழந்தைகள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக நீராடி செல்கின்றார். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சீசன் விரைவில் தொடங்கும்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ளது. முன்னதாகவே மழைக்காலம் தொடங்கினால் இந்த ஆண்டு குற்றால சீசனும் முன்னதாகவே தொடங்கும் என்றும் உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications