குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் வந்த வினை.. நடைபாலத்தை பாருங்க
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பேரிரைச்சலுடன் கொட்டும் தண்ணீரில் நடைபாலத்தின் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டதோடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து நடைப்பாதைகள் சேதமடைந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. பெஞ்சல் புயல் கரையை கடந்தலும் கூட வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புகுதியாக மாறியது தான் இந்த மழைக்கு காரணம்.

நேற்று முதல் இன்று காலை வரை தென்காசி மாவட்டத்தில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. முன்னதாக நேற்று தென்காசி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையின் காரணமாக நேற்று காலை முதல் சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. மெயினருவி, ஐந்தருவி, சிற்றவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மாலையில் பெய்த கனமழையால் இரவில் குற்றாலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. பொதுவாக குற்றாலம் மெயினருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுப்பை தாண்டி நேரடியாக தடாகத்தில் வந்து அருவி தண்ணீர் விழும்.

ஆனால் நேற்று பெய்த கனமழையால் தடாகத்தையும் தாண்டி பாறை மீது பேரிரைச்சலுடன் தண்ணீர் வந்து விழுந்தது. அதேபோல் ஆக்ரோஷமாக விழுந்த தண்ணீரால் அருவிக்கு செல்லும் நடைப்பாதை சேதமடைந்தது. அதேபோல் தண்ணீரில் இறங்காமல் பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைப்பாலத்தின் 2வது பகுதியில் இரும்பு கம்பியால் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடை பெயர்ந்தது.

அதேபோல் பொதுமக்களை கண்காணிக்க வசதியாக குற்றால மெயினருவி அருகே போலீசாருக்காக அமைக்கப்பட்டு இருந்த கூண்டும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி குற்றால அருவியில் ஏற்பட்ட வரலாறு காணாத இந்த வெள்ளம் அருகே உள்ள கடைகளுக்குள்ளும் புகுந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் தள்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications