அடுத்தடுத்து சிக்கும் சசிகலா உறவுகள்... பெரா வழக்கில் சிறைவாசம்தானா? பீதியில் தினகரன்
தம் மீதான பெரா வழக்குகளில் சிறைக்கு செல்ல நேரிடலாம் என தினகரன் தரப்பு பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: சசிகலாவின் உறவினர்களான ரிசர்வ் பேங்க் பாஸ்கரன், அவரது மனைவி ஸ்ரீதலா, சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன் தம்பி பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்குகளில் சிறை தண்டனை உறுதியான நிலையில் தம் மீதான பெரா வழக்குகளின் தீர்ப்பு குறித்து தினகரன் பீதியில் உறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்துக்கு எதிரான டெல்லியின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தின் உறவுகள் அனைத்துமே வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.

சசி உறவினர்களுக்கு சிறை
வருமான வரித்துறையினர் அடுத்தடுத்து சசிகலாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சசிகலாவின் பினாமிகளாக இருந்த அவரது அக்கா மகள் ஸ்ரீதலா மற்றும் அவரது கணவர் ரிசர்வ் பேங் பாஸ்கரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தம்பி பாஸ்கரனுக்கும் சிறை
இதேபோல சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நடராஜன் சிறைக்குப் போவது உறுதியாகி உள்ளது. இது சசிகலா குடும்பத்தை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பீதியில் தினகரன்
குறிப்பாக பெரா வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் தினகரனை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சசிகலா குடும்பத்தின் 355 பேரை வளைத்து விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் தினகரனின் சென்னை வீட்டுக்குள் மட்டும் நுழையாமல் இருந்துள்ளனர்.

தினகரன் வழக்கில் தீர்ப்பு
தீவிர அரசியலில் தாம் தலையெடுக்காமல் இருக்க தம்மை நிச்சயம் சிறைக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தினகரன். இதற்கு முன்னோட்டமாகத்தான் சொந்தங்கள் மீதான வழக்குகளில் தீர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆகையால் அடுத்து வரும் நாட்களில் தினகரன் மீதான வழக்குகளின் தீர்ப்புகளும் வரலாம்.. தினகரனும் சிறைக்கு செல்லும் காட்சிகளும் அரங்கேறலாம் என்றே கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications