61 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு: தமிழக நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை மீனவர்கள் 61 பேரை விடுவித்து தமிழகத்தின் இரு நீதிமன்றங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் அம்பாறை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 59 மீனவர்கள் மற்றும் நீர்கொழும்புவை சேர்ந்த 2 மீனவர்கள் உட்பட 61 பேர் இந்திய கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 59 மீனவர்கள் செப்டம்பர் 17 முதல் நவம்பர் 8 வரையுள்ள காலங்களில் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் 17ந்தேதி 5 பேரும், 26 பேர் அக்டோபர் 10ந்தேதியும், 24 பேர் அக்டோபர் 31ந்தேதியும் மற்றும் 4 பேர் நவம்பர் 8 ந்தேதியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், கடந்த ஜூலை 27ந்தேதி நீர்கொழும்புவை சேர்ந்த 2 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 61 பேரையும் விடுதலை செய்ய உள்ளூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+