61 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு: தமிழக நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம்: இலங்கை மீனவர்கள் 61 பேரை விடுவித்து தமிழகத்தின் இரு நீதிமன்றங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையின் அம்பாறை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 59 மீனவர்கள் மற்றும் நீர்கொழும்புவை சேர்ந்த 2 மீனவர்கள் உட்பட 61 பேர் இந்திய கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 59 மீனவர்கள் செப்டம்பர் 17 முதல் நவம்பர் 8 வரையுள்ள காலங்களில் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் 17ந்தேதி 5 பேரும், 26 பேர் அக்டோபர் 10ந்தேதியும், 24 பேர் அக்டோபர் 31ந்தேதியும் மற்றும் 4 பேர் நவம்பர் 8 ந்தேதியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், கடந்த ஜூலை 27ந்தேதி நீர்கொழும்புவை சேர்ந்த 2 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 61 பேரையும் விடுதலை செய்ய உள்ளூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது.
அவர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications