திமுக கூட்டணியில் இணைய சி.பிஐ முடிவு... சி.பி.எம். தயக்கம்?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தயங்குவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிதான் ஒதுக்க முடியும் என்பதில் அதிமுக பிடிவாதமாக இருந்தது.

இதை இடதுசாரிகள் ஏற்க மறுத்த நிலையில் கூட்டணியே வேண்டாம் என அதிமுக முடிவு செய்தது. இதனால் வேறுவழியின்றி இடதுசாரிகளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை என்று அறிவிக்க நேரிட்டது.
இந்த நிலையில் இடதுசாரிகள் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தார். இதேபோல் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிடர் கழகமும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்தன.
இரண்டு இடதுசாரி கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதில் திமுக அணியில் இணைவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களால் திமுக அணியில் இணைய மார்க்சிஸ்ட் கட்சி தயங்குவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications