தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் படுகொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். அவருக்கு சொந்தமான மூங்கில் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் படுகொலை செய்யபட்டுக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராதாகிருஷ்ணன் படுகொலைக்கு அரசியல் காரணமா, தொழில் போட்டியா அல்லது வேறு அதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications