மலைகோட்டை நகரை கைப்பற்றுவாரா சி.பி.எம் ஸ்ரீதர்?
திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான எஸ். ஸ்ரீதர் (வயது 56) போட்டியிடுகிறார்.
எம்.ஏ., வரை படித்துள்ள இவர் 1974ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 40 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு எஸ். ருக்மணி என்ற மனைவியும், எஸ். விவேக் என்ற மகனும், எஸ், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.
கட்சி மற்றும் தொழிற்சங்க போராட்டங்கள் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட முயற்சி போன்ற போராட்டங்களில் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியவர்.
பொன்மலை பணி மனையில் தேர்வு செய்யப்பட்ட கலாசி தொழிலாளர்களை வேலைக்கு எடுத்திட வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஸ்ரீதர், போட்டி வேட்பாளர்களை வென்று மலைக்கோட்டையில் வாகை சூடுவாரா என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் எதிர்பார்ப்பாகும்.