வடசென்னையில் வெற்றி பெறுவாரா? சிபிஐ (எம்) வேட்பாளர் வாசுகி

பி.காம் படித்துள்ள இவர் 1977-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார்.
இவரது தந்தை ஆர். உமாநாத் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார்.
இவரது தாய் மறைந்த பாப்பா உமாநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவரது கணவர் தோழர் ஏ.பி.விஸ்வநாதன், மகள் அனுபமா.
வங்கி ஊழியராக இருந்து
வங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர் 2000-ல்-விருப்ப ஓய்வு பெற்று கடந்த 14 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார்.
மாதர் சங்க பொறுப்பு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பங்கேற்றுள்ளார்.
போராட்ட களத்தில்
பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கிய பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.
மாணவிகள் பிரச்சினைக்கு
அதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். இவரை வடசென்னை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை தனது பிரச்சார யுக்தியால் தோற்கடிப்பாரா என்பது தோழர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications