மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டம்- முத்தரசன் உட்பட 200 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழரின் பாரம்பரியமான ஏறு தழுவல் எனப்படும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் பலரும் எப்படியும் நடத்திவிடலாம் என நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை பெத்தானியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.

CPI stages protest seeking Jallikattu

இதற்கு அக் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி தரவில்லை. ஆகையால் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முத்தரசன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+