சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியில் இல்லை!
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மார்க்ஸிட் கட்சி அறிவித்துள்ளது.
கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications