ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு!
ஆர்கே நகர் இடைத்தேர்லில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
கோவை: ஆர்கே நகர் இடைத்தேர்லில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, அதிமுக அம்மா கட்சி ஆகியவை கடந்த முறை நிறுத்திய வேட்பாளர்களையே இம்முறையும் களமிறக்கியுள்ளன.

ஆனால் கடந்த முறை வேட்பாளரை அறிவித்த மார்க்சிஸ்ட் கட்சி இம்முறை வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் மாநிலக் குழுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அவர் கூறினார். மக்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்டும் வகையில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மேடையில் இருந்து திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-
5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. தெலுங்கானாவில் இருந்து MP ஆகும் அபிஷேக் சிங்வி! -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
கெட் அவுட் காங்கிரஸ்..ஒரே வார்த்தையில் முடித்த ஸ்டாலின்! இறங்கி வந்த கதர்கள்..பஞ்சாயத்து பேசும் ப.சி -
சிட்டிங் எம்எல்ஏ நாகை மாலிக்கு 3 வாய்ப்பும் ஓவர்.. கீழ்வேளூர் தொகுதியில் களமிறங்கும் பெ.சண்முகம்? -
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு! -
ராஜ்ய சபா தேர்தல்.. திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு! -
திமுகவை தொடங்கிய ஒரே ஆண்டில் சிறைக்குள் அண்ணா! பக்கத்து அறையில் பெரியார்! -
திமுகவை தொடங்கிய ஒரே ஆண்டில் சிறைக்குள் அண்ணா! பக்கத்து அறையில் பெரியார்! -
பேச்சுவார்த்தை, சொதப்பல், ரிப்பீட்டு.. காங்கிரஸால் வெல்லும் பாஜக! தேர்தல் வந்தா இதே வேலையா போச்சு -
மாலை மகள் நிச்சயதார்த்தம்.. மதியம் ஸ்டாலினுடன் பேச்சு.. திமுக கூட்டணிக்காக போராடும் செல்வப்பெருந்தகை












Click it and Unblock the Notifications