சின்னம்மாவையே நீக்கனும்னா எப்படி... ஆதங்கப்படும் சி.ஆர்.சரஸ்வதி!
Recommended Video

சென்னை : முன்னாள், இந்நாள் முதல்வர்கள், சசிகலாவை ஒதுக்கி வைப்பது ஏன் என்பதை எதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கேட்டுள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்பு பரபரப்புக்கு மத்தியில் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியும் சொல்கிறார்கள், அவர்கள் என்ன தீங்கு செய்துவிட்டார்கள். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைப்பதாக இருந்தால் எதற்காக ஆதரித்து பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
எதற்காக முதல்வர் பழனிசாமி தினகரனுக்கு ஆதரவாக தொப்பி சின்னம் அணிந்து கொண்டு வாக்கு சேகரித்தார் என்ற கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் தான் அவர்களிடம் விடை காண வேண்டும். இதற்கு உரிய விளக்கத்தை அவர்கள் கொடுத்தேத் தீர வேண்டும்.

என்ன தீங்கு செய்தார்கள்?
ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்து சென்னை வந்தது எப்படி அவரை யார் அழைத்து வந்தார்கள் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரியும். இவர்கள் யாருக்குமே தினகரனோ, ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவோ எந்தத் தீங்கையும் செய்துவிடவில்லை. அவர்களை ஒதுக்க வேண்டிய காரணம் என்ன என்று தான் இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை.

விளக்கம் வேண்டும்
ஒதுக்கி வைப்பதற்கான காரணத்தை அவர்கள் விளக்க வேண்டும். சசிகலாவால் பதவி போனது என்றோ அல்லது அவரால் தங்களால் முன்னேற முடியவில்லை என்றோ கூறுங்கள். மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை அவர்கள் சொல்வார்கள்.

சசிகலாவிடம் கெஞ்சியது யார்?
சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னது இந்த அமைச்சர்கள் தான். அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார், மக்களை துணை சபாநாயர் தம்பிதுரை உள்ளிட்டோர் நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என்று சசிகலாவிடம் சொன்னார்களா இல்லையா?.போயஸ் கார்டனில் போய் சசிகலாவிடம் நீங்கள் தான் பொதுச்செயலாளர், நீங்கள் தான் முதல்வர் என்று சொன்னார்களா இல்லையா?

இணைய வேண்டும் என்பதே விருப்பம்
நடந்த எல்லா விஷயமும் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும், அப்படி இருந்தும் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். சசிகலாவை எல்லோருக்கும் தெரியும் மற்றவர்கள் முன்னேறத் தான் துணை நின்றிருக்கிறார். எல்லோரும் இணைந்து இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம், பிரிவுகள் வேண்டாம் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications