ஈரோட்டில் பட்டாசு விபத்து.. மளிகை கடைக்காரர் மகன் உட்பட 3 பேர் பலி
Recommended Video

ஈரோடு: மளிகை கடையில் பட்டாசு இறக்கியபோது ஏற்பட்ட விபத்தில், 3 பேர் கொல்லப்பட்டனர், 9 வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு சாஸ்திரி நகர், பகுதியில், வாகனத்தில் இருந்து மளிகை கடைக்கு பட்டாசு இறக்கியுள்ளனர். சேலத்தில் இருந்து குட்டி சரக்கு ஆட்டோ மூலம் பட்டாசு பொருட்கள் ஏற்றி வரப்பட்டிருந்தது.
அவற்றை இறக்கியபோது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், கடை உரிமையாளரின் மகன், கூலித்தொழிலாளி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அதிர்வு காரணமாக 9 வீடுகள் சேதமடைந்தன. காலை 6 மணியளவில் நடந்த இந்த விபத்தின்போது, சிலிண்டர்கள் வெடிப்பதை போல பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்த சுகுமார்தான் மளிகைக் கடை உரிமையாளராகும். தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை வாங்கிய இவர், சாஸ்திரி நகரில் தமக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் பாதுகாப்பாக வைப்பதற்காக, லோடு ஆட்டோவில் கொண்டு சென்றபோது அவருடன் கல்லூரியில் படிக்கும் மகன் கார்த்திக்கும் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் பட்டாசை இறக்கி வைத்தபோது, வெங்காய வெடிகள் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்துள்ளது. எனவே அது வெடித்தது. அந்த நெருப்பு பிற பட்டாசுகளுக்கும் பரவியதால் விபத்தின் வீச்சு அதிகமாக இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த சுகுமார் தலைமறைவாகிவிட்டார். சம்பவ இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பார்வையிட்டார். அனுமதியின்றி சுகுமார், பட்டாசு குடோன் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பொன்னேரி அருகே கார் கவிழ்ந்து பலி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications