சென்னை மதுரவாயலில் சோகம்... தொட்டிலை ஆட்டியபோது கட்டிலில் தலை மோதி 4 மாத குழந்தை பரிதாப பலி
சென்னையில் தொட்டிலை ஆட்டியதில் கட்டிலில் தலைமோதி 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
Recommended Video

சென்னை: தொட்டிலை ஆட்டியபோது அருகிலிருந்த கட்டிலில் தலைமோதியதில் 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சோகம் சென்னை மதுரவாயலில் நடைபெற்றுள்ளது.
மதுரவாயல், ஜெயலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரபு வயது 35. இவர் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி 30. இவர்களுக்கு லோகேஸ்வரி 4 என்ற மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டில் குழந்தை பிரகதீஸ்வரனை சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பவானி வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தம் கேட்ட லோகேஸ்வரி தூங்கவைப்பதற்காக தொட்டிலை வேகமாக ஆட்டினார். அப்போது அருகில் இருந்த கட்டில் மீது குழந்தையின் தலை மோதியதாக தெரிகிறது. இதில், இதனால் குழந்தையின் தலையில் உள்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் தலை வீங்க ஆரம்பித்தது. குழந்தையோ வலி பொறுக்க முடியாமல் கதறி துடித்தது. இதனால் குழந்தையை உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை பிரகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கட்டிலில் தலை மோதியதால்தான் குழந்தை இறந்து போனது தெரியவந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications