தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதால் குற்றங்கள் அதிகரிப்பு - அன்பழகன் சாடல்
புதுகை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து விட்டன என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க பொதுகூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன்அரசு தலை மை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரியய்யா, தெற்கு மாவட்ட செயலாளர் தங்க வேலு ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. பொது செயலாளர் அன் பழகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "கடந்த தி.மு.க ஆட்சியின் போது பால், அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்ற விலையை விட பல மடங்கு அளவிற்கு விலைவாசி வரலாறு காணாத அளவிற்கு தற்போது உயர்ந்து விட்டது.
பருப்புகளின் விலை போன மாதம் வரை ரூபாய் 62க்கு விற் பனையானது. ஆனால் தற்போது ரூபாய் 218க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் ரூபாய் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த தோடு, பயிர்க்கடன் ரூபாய் 4 ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்தது. அதைப் போலவே இந்த முறை மதுக்கடைகளை மூடி விட்டு சிறந்ததொரு நல்லாட்சியை தி.மு.க தரும்.
தமிழகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 300 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில் பஞ்சம் வந்ததில்லை. தஞ்சையில் விளைந்து தமிழகத்தை வாழ வைத்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது தஞ்சையும் வறட்சியாகி விட்டது. சட்ட சபையில் அனைத்தையும் விதி எண் 110-ன்கீழ் ஜெயலலிதா அறிவித்து கொண்டிருக்கிறார். இதுவரை 130க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அறிவித்து உள்ளார்.
ஆனால் எதையும் செயல் படுத்தவில்லை. இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத் திற்கும், கரூர் மாவட்டத்திற்கும் மருத்துவ கல்லூரி கொண்டு வரப் போவதாக அறிவித்திருக் கிறார். ஆண்டு கடைசியில் அறிவித்தது செயல்படுத் துவதற்கு அல்ல. மக்களை ஏமாற்றுவதற்காக. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் கொலை, கொள்ளை, திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து விட்டது" என்று பேசினார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications