தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதால் குற்றங்கள் அதிகரிப்பு - அன்பழகன் சாடல்
புதுகை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து விட்டன என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க பொதுகூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன்அரசு தலை மை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரியய்யா, தெற்கு மாவட்ட செயலாளர் தங்க வேலு ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. பொது செயலாளர் அன் பழகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "கடந்த தி.மு.க ஆட்சியின் போது பால், அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்ற விலையை விட பல மடங்கு அளவிற்கு விலைவாசி வரலாறு காணாத அளவிற்கு தற்போது உயர்ந்து விட்டது.
பருப்புகளின் விலை போன மாதம் வரை ரூபாய் 62க்கு விற் பனையானது. ஆனால் தற்போது ரூபாய் 218க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் ரூபாய் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த தோடு, பயிர்க்கடன் ரூபாய் 4 ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்தது. அதைப் போலவே இந்த முறை மதுக்கடைகளை மூடி விட்டு சிறந்ததொரு நல்லாட்சியை தி.மு.க தரும்.
தமிழகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 300 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில் பஞ்சம் வந்ததில்லை. தஞ்சையில் விளைந்து தமிழகத்தை வாழ வைத்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது தஞ்சையும் வறட்சியாகி விட்டது. சட்ட சபையில் அனைத்தையும் விதி எண் 110-ன்கீழ் ஜெயலலிதா அறிவித்து கொண்டிருக்கிறார். இதுவரை 130க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அறிவித்து உள்ளார்.
ஆனால் எதையும் செயல் படுத்தவில்லை. இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத் திற்கும், கரூர் மாவட்டத்திற்கும் மருத்துவ கல்லூரி கொண்டு வரப் போவதாக அறிவித்திருக் கிறார். ஆண்டு கடைசியில் அறிவித்தது செயல்படுத் துவதற்கு அல்ல. மக்களை ஏமாற்றுவதற்காக. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் கொலை, கொள்ளை, திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து விட்டது" என்று பேசினார்.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
சென்னை அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. நள்ளிரவில் பைக்கில் சென்றபோது கொடூரம்! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
காட்டுக்குள் போன மாணவி.. துண்டு துண்டான உடலைப் பார்த்து கதறிய குடும்பம்! துடிதுடித்த தூத்துக்குடி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ











Click it and Unblock the Notifications