'தனி ரயில் பெட்டியில்' நகை, பணம் கடத்தல்- சிபிஐயிடம் சிக்கிய ரயில்வே ஐஜி!
ஹவுரா சென்ற ரயிலில் தனியாக ஒரு பெட்டியை இணைத்து அதில் நகை பணம் கடத்திய ரயில்வே போலீஸ் ஐஜியிடன் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலில் புதிய பெட்டியை இணைத்து நகை பணம் எடுத்துச் சென்ற ரயில் போலீஸ் ஐஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் ரயிலில் தனிப்பெட்டி இணைக்கப்பட்டு அதில் நகை பணம் கடத்தப்படுவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அதில் சேர்க்கப்பட்டிருந்த அந்த ஏசி பெட்டியை கழற்றி சேத்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்துள்ளனர். அதிலிருந்த நகைகள் மற்றும் பணக் கட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணையில் உயரதிகாரிகள் அவசர காலங்களில் செல்லும் தனி ஏசி பெட்டியில் நகைகள் மற்றும் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியை ஐசிஎப் இடமிருந்து சிஆர்பிஎப் ஐஜி எஸ்.கே.பாரி பெற்றதும், அதில் அவரே நகை மற்றும் பணத்தை கடத்திச்சென்றதும் தெரியவந்துள்ளது.
தற்போது சிபிஐயிடம் சிக்கியுள்ள ஐஜி எஸ்.கே.பாரி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரைச் சேர்ந்தவர். நகைகள் மற்றும் பணத்தை கடத்தி தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயன்றாரா என்று விசாரித்து வரும் அதிகாரிகள் , இதில் மற்ற அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பை சிபிஐ அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.பிடிபட்ட ஐஜி பாரியிடம் சிபிஐ அதிகாரிகள் மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து தனி ரயில் பெட்டியில் நகை மற்றும் பணத்தை கடத்திச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications