சென்னையை நெருங்கும் நாடா புயல்: வெள்ள பயத்தில் மக்கள்
சென்னை: நாடா புயல் சென்னையை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவான நாடா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் நாளை சென்னை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில் நாடா புயல் பற்றி தெரிய வேண்டியவை,

கனமழை
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வீசும்.

சென்னை
சென்னையை பொறுத்தவரை புயல் நெருங்கி வர வர மழையின் வேகம் அதிகரிக்கும். நாடா புயலால் கடலூர், நாகை மற்றும் புதுவையில் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாராயணசாமி
தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உஷார் நிலையில் இருக்குமாறு புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா
நாடா புயலால் கேரளாவில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications