புயல் புரட்டிப் போட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஆபத்து கால உதவி எண்கள் அறிவிப்பு
ஓகி புயல் புரட்டிப் போட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஆபத்துகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: ஓகி புயல் உருக்குலைத்து போட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஆபத்து கால உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரியை மோசமாக பாதித்துள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. சுசீந்தரம் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கான அவசர எண்களை வெளியிட்டுள்ளது.
அவசர கால உதவி எண்கள்:
1077
04652231077
9442480028
9445008139












Click it and Unblock the Notifications