சென்னை ஹயாத் ஹோட்டல் கண்ணாடிகளை பந்தாடிய பேய்க்காற்று #CycloneVardah
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தால் சென்னையில் வீசும் பேய்க்காற்றில் ஹயாத் ஹோட்டலின் கண்ணாடிகள் பெயர்ந்து பறந்துவிட்டன.

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காற்று மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

பேய்க்காற்றால் சென்னையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் 7 நட்சத்திர ஹோட்டலின் கண்ணாடிகளை பேய்க்காற்று பெயர்த்துவிட்டது.

இதனால் கண்ணாடிகள் காற்றில் பறந்து வந்த கீழே விழுந்தன. இதே போன்று சென்னை கடற்கரை ரயில் நிலை கூரையும் காற்றில் பறந்தது. ஹயாத் ஹோட்டல் திமுகவின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயம் அருகே உள்ளது.
சென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications