தப்பி ஓடிய தஷ்வந்த்.. சென்னைக்கு அழைத்து வரும் திட்டம் தவிடுபொடி!
தாயை கொலை செய்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
Recommended Video

சென்னை : சென்னையில் தாயை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக இருந்த நிலையில் அவர் தப்பி விட்டதால் திட்டம் பாழாகியுள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் (22) பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்தார்.

இவரை கைது செய்த போலீஸார் இவர் மீது குண்டர் சட்டத்தை போட்டனர். ஆனால் இதை எதிர்த்து இவரது தந்தை சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
போதைக்கு அடிமையான தஷ்வந்த், தாய் சரளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டபோது அவர் கொடுக்க மறுக்கவே அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார்.
இதையடுத்து சரளா அணிந்திருந்த 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார். சேகரின் புகாரின்பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தேடினர். இந்நிலையில் மும்பையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இதையடுத்து தஷ்வந்த்தை சென்னை அழைத்து செல்ல மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் தஷ்வந்த்தை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தஷ்வந்த் இன்றிரவு சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் தஷ்வந்த் தப்பிஓடி விட்டார்.












Click it and Unblock the Notifications