பெங்களூருவை பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும்.. தா.பாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: பெங்களூரு நகரத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் அந் நகரத்தை பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே வரும் 20 ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. மேலும் கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான 65 பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர் கன்னடர்கள். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறுகையில், " பெங்களூரில் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு மக்கள் வாழ்வதற்கு சூழ்நிலை இல்லாத நிலையே தற்போது உருவாகியுள்ளது.
எங்கு பார்த்தாலும் வன்முறை சம்பவம், மற்றும் மக்கள் மிகவும் பீதியடைந்து உள்ளனர். இதனால் பெங்களூருவை பாதுகாப்பற்ற நகரமாக அறிவிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications