என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு : தீபா காட்டம்
என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என தீபா தெரிவித்துள்ளார். மேலும் சில காலம் சசிகலா குடும்பத்தினரோடு இருந்தவர்களும் தற்போது ஓட்டுக்கேட்டு வருவதாக ஓபிஎஸ் அணியினரை தீபா சாடினார்.
ஆர்கே.நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா, தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா பிரச்சாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. யாருடைய கையில் சிக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களே இன்று கட்சியை நடத்தி வருகின்றனர். சில காலம் அவர்களோடு இருந்தவர்களும் இன்று ஓட்டு கேட்டு வருகிறார்கள் என ஓபிஎஸ் அணியினரையும் அவர் சாடினார்.

மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வருவேன் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் அவர்களை அடை யாளம் கண்டு ஆர்.கே.நகரில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மங்களை நிச்சயமாக நான் வெளியில் கொண்டு வருவேன் என தீபா உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications