போயஸ் தோட்டத்தில் அடிதடி நடந்தது உண்மை தான்.. தீபக் பொய் சொல்கிறார் - தீபா பேட்டி
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அடிதடி நடந்தது உண்மை தான் என ஜெ.தீபா கூறியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னை போயஸ் கார்டனுக்கு வருமாறு சகோதரர் தீபக் காலையில் இருந்து தன்னை தொலைபேசியில் தொந்தரவு செய்ததார். உடனே வரவேண்டும் எனவும் கூறினார். போயஸ் கார்டனுக்குள் என்னை விடமாட்டார்கள் நான் வரமோட்டேன் என்று சொன்னபோதும், விடுவார்கள் வா என்று தீபக் சொன்னதாக தீபா தெரிவித்துள்ளார்.

மேலும் போயஸ் கார்டனுக்குள் வந்து ஜெ. அம்மா படத்திற்கு மலர் தூவி விட்டு சென்று விடுமாறு கூறித்தான் என்னை அழைத்தார் தீபக். அதன் பேரில் தான் நான் அங்கு சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை தாக்கினர்கள். அப்போது தீபக் தடுக்கவில்லை. செய்தியாளர்களின் கேமராவை பறிமுதல் செய்து தாங்கியதும் அவர்கள் தான்.
இதைத்தான் நான் வெளியே வந்து கூறினேன். அப்போதும் என்னை சிலர் தாக்கினார்கள். இது அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது எல்லாமே தீபக் ஏற்பாடுதான். நடந்தவை அனைத்தையும் மறைத்து தீபக் பொய் சொல்கிறார் என்றார் ஜெ.தீபா.












Click it and Unblock the Notifications