For Quick Alerts
For Daily Alerts
Just In
அறிவித்தபடி ஆர்கே.நகரில் போட்டியிடுவேன்.. ஜெ. அண்ணன் மகள் தீபா உறுதி
ஆர்கே.நகர் தொகுதியில் அறிவித்தபடி போட்டியிடுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் அறிவித்தபடி போட்டியிடுவேன் என தீபா தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அவரை தொடர்பு கொண்ட ஆதரவாளர்களிடம் தீபா இதனை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்திலேயே தனது அத்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என தீபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுன் தன்னை தொடர்பு கொண்ட ஆதரவாளர்களளிடம் தீபா இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் அவரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
English summary
Deepa told her supporters that she will contest in the RK.Nagar by election.
Story first published: Thursday, March 9, 2017, 16:23 [IST]