நேற்றே சொன்னார் தீபா அவ்வளவு நம்பிக்கையாக.. வேட்பு மனு நிராகரிக்கப்படலாம்னு!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
ஆர்கே நகர் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று நடிகர் விஷால் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மற்றும் 42 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
கடைசி ஆள் தீபா
நடிகர் விஷாலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய 68வது டோக்கனும், தீபாவுக்கு கடைசி டோக்கனாக 91வது டோக்கனும் வழங்கப்பட்டிருந்தது. கடைசி ஆளாக வேட்புமனுத்தாக்கல் செய்தார் தீபா.
படிவம் 26ஐ நிரப்பவில்லை
இந்நிலையில் தீபாவின் வேட்பு மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் படிவம் 26ஐ நிரப்பாமல் விட்டதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றே சொன்னார்..
வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஃபிரி ஹேர் விட்டப்படி நேற்று புதிய கெட்டப்பில் வந்திருந்தார் தீபா. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என கூறினார்.
வேண்டும் என்றே..
தீபா சொன்னது போலவே அவரது வேட்புமனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தனது வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் படிவம் 26ஐ நிரப்பாமல் விட்டாரா என சமூகவலைதளங்களில் இப்போதே விவாதிக்க தொடங்கிவிட்டனர்..