குவிந்த ஆதரவாளர்கள்.. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தீபா அஞ்சலி.. இன்று முக்கிய அறிவிப்புக்கு வாய்ப்பு
மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தீபா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தீபா ஆதரவாளர்களான ஆண்களும், பெண்களும் அங்கு குவிந்தனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தீபா ஆதரவாளர்களான ஆண்களும், பெண்களும் அங்கு குவிந்தனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குவிந்திருந்த பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு தீபா பதிலளிக்கவில்லை. அதேநேரம், இன்று காலை 11 மணியளவில் தீபா தனது தி.நகர் இல்லத்தில் நிருபர்களை சந்திக்க உள்ளார். அப்போது புதிய கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபா என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications