Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. பிறந்த நாளில் பேரவை தொடங்குகிறார் தீபா.. கொடியும் இன்று அறிமுகம்

ஜெயலலிதா பிறந்த நாளான இன்று அவரது அண்ணன் மகள் தீபா, பேரவை ஒன்றை தொடங்க உள்ளார். அதன் பெயர் மற்றும் கொடியை இன்று மாலை அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே சொல்லியிருந்தார். அதன்படி இன்று பேரவை ஒன்றை தொடங்க இருக்கிறார்.

இது குறித்து அவர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை தீபா செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை அவர் புதியதாக தொடங்க உள்ள பேரவையின் பெயரை வெளியிட உள்ளார். மேலும், பேரவையின் கொடியையும் அவர் வெளியிடுவதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Deepa starts Peravai not political party

ஜெயலலிதா மறைந்ததில் இருந்து தீபாவிற்கு ஆதரவு பெருகி வந்தது. அன்றாடம் அவரது வீட்டு வாசலில் சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். இதனையடுத்து, அரசியலில் தான் இறங்கப் போவதாகவும், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அது குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் தீபா அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பேரவை தொடக்கத்திற்காக அறிவிப்பை தீபா வெளியிட்டுள்ளார். முன்னதாக, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+