ஜெ. அபராதத்தை தீபக் கட்டுவதாக கூறுவதில் சதி உள்ளது.. தீபா
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டுவதாக தீபக் கூறியள்ளதிலும் சதி உள்ளது என்று எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் தலைவர் தீபா ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை தாமே செலுத்துவதாக தீபக் கூறியுள்ளதில் சதி இருக்கிறது என்று தீபா தெரிவித்தார்.
தி.நகரில் அவர் அளித்த பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கில ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தாம் செய்து கொண்டிருப்பதாக தீபக கூறியதன் பெரிய சதியே உள்ளது. அபராதத்தை நான் செலுத்துவேனா என்று கேட்கிறீர்கள், அதற்கு என்னிடம் பதில் இல்லை.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆர்.கே. நகரில் போட்டியிட வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அதே தொகுதியில் தீபா பேரவை போட்டியிடும். அங்கு நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
தமிழக மக்களுக்கு சசிகலா என்ன செய்தார்?. அவர் தமது குடும்பத்துக்கு தேவையானதை மட்டுமே செய்து கொண்டார். தமிழக மக்களுக்காக எனது வாழ்க்கையே அர்ப்பணிக்க உள்ளேன். மக்களின் விருப்பப்படியே அரசியல் பயணத்தைத் தொடங்கி உள்ளேன் என்றார்.