நீலகிரியை உலுக்கும் வெள்ளம்.. நீரில் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படும் மான்கள்
மான்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.
Recommended Video

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்கம்பங்கள் சாய்ந்தன
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, மேலும் உதகை மற்றும் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளா கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கனமழையால் காரணமாக சாலையில் மரங்கள் விழுந்தன. மின்கம்பங்க ளும் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டன.

படகுகள் மூலம் மீட்பு
நிலம்பூர் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் அவ்வழியாக தமிழ் நாடு கர்நாடக போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் சரக்குகள் ஏற்றிவந்த ஓட்டுநர் மற்றும் லாரிகளில் வந்தவர்களை அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.

அடித்து செல்லப்பட்ட மான்கள்
மேலும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பல வீடுகளும் இடிந்து பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நிலம்பூர் பகுதியில் மலைபகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன.

விடுமுறை அறிவிப்பு
கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பல ஊர்களில் பெய்து வரும் கனமழை நீரானது நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கனமழை காரணமா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கேரளா அரசு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications