அவதூறு வழக்கில் விஜயகாந்த் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்த விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கேப்டன் தொலைக்காட்சியில் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக கேப்டன் தொலைக்காட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமான் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications