தொடர்ச்சியாக 5வது முறை.. மீண்டும் ஏமாற்றிய பருவமழை.. வானிலை மையம் அறிக்கை!
இந்தியாவில் பருவமழை கணித்ததை விட குறைவாக பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: இந்தியாவில் பருவமழை கணித்ததை விட குறைவாக பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவில் பருவமழை ஆய்ந்து ஓய்ந்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30ம் தேதியோடு அதிகாரப்பூர்வமாக பருவமழை முடிந்து உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் திடீர் என்று மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை ஐந்து நாட்களுக்கு பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறைவு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் தரவுகளின்படி இந்தியாவில் இந்த வருடம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான மழையே பெய்து இருக்கிறது. எதிர்பார்த்ததை விட 9.4 சதவிகிதம் குறைவான மழையே இந்த பருவமழை அப்போது பெய்து இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இப்படி மழையின் அளவு குறைந்துள்ளது.

எங்கு எல்லாம் குறைவு
2002, 2004, 2009, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் வரிசையாக மழை குறைந்து கொண்டே வருகிறது. முக்கியமாக இந்த வருடம் வடகிழக்கு மாநிலங்களில் மழை மோசமாக குறைந்து இருக்கிறது. அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், மேற்கு இந்தியாவில் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் , பீகாரில் மழை குறைந்துள்ளது. அதேபோல் குஜராத்திலும் குறைவான மழையே பெய்துள்ளது.

பிரச்சனை
இதனால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நிலத்தடி நீர் அளவு வேகமாக குறையும். பெருமளவில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நதிகளில் நீர்வரத்து வேகமாக குறையும். இதனால் இந்தியாவின் ஜிஎஸ்டியே பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிலத்தடி நீர் சதவிகிதம் 70 சதவிகிதமாக குறைந்து போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவின் நிலைமை
ஆனால் அதே சமயம் தற்போதுதான் தென்னிந்தியாவில் அடுத்த மழை தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் முழுக்க மிதமாகவும், கனமாகவும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏற்கனவே கேரளாவிலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications