விடாது கருப்பு... டிடிவி தினகரனின் தோழி லைனாவிடம் டெல்லி போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக டிடிவி தினகரனின் தோழி லைனாவிடமும் சென்னையில் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனின் தோழி லைனாவிடமும் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை போலீசார் 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது. இதையடுத்து இன்று சென்னைக்கு டிடிவி தினகரன் கொண்டுவரப்பட்டார்.

முதலில் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தினகரன் வீட்டில் அவரது மனைவி அனுராதா முன்னிலையிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே டெல்லி போலீஸின் 4 பேர் கொண்ட ஒரு டீம் திருவல்லிக்கேணியில் உள்ள டிடிவி தினகரனின் தோழி லைனா என்பவரிடமும் விசாரணை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி புரோக்கர் சுகேஷுக்கு லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டதில் லைனாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறது போலீஸ்.
இதனால்தான் அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தோம் என கண்சிமிட்டுகிறது டெல்லி போலீஸ்.












Click it and Unblock the Notifications