அதெப்படி தேர்தல் அதிகாரியை நான் மிரட்ட முடியும்? கேள்வி கேட்கிறார் விஷால்
தேர்தல் அதிகாரியை நான் மிரட்டியதாக கூறுகிறார்கள் அது முடியுமா? என்று நடிகர் விஷால் கேட்டுள்ளார். ஜனநாயகத்தில் நிலை இப்படியாகிவிட்டதே என்றும் அவர் கேட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நான் மிரட்டியதால் என்று வேட்புமனுவை முதலில் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுவதில் உண்மையில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். 5 ஆம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் விஷால் தொடர்ச்சியாக முட்டி மோதிப்பார்த்தார். ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் விஷாலின் கோரிக்கையை ஏற்க வேலுச்சாமி மறுத்து விட்டார்.

ஆடியோ ஆதாரம் கொடுத்த விஷால்
நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் சுமதி மற்றும் தீபன் இருவரின் கையெழுத்து போலியானது என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் மிரட்டப்பட்டதால் சுமதியும், தீபனும் பின்வாங்கியதாக ஆடியோ ஆதாரத்தை விஷால் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் புகார் மனு அளித்தார். ஆனால் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என்று தேர்தல் அதிகாரி கூறி விட்டார்.

வேட்புமனுவை ஏற்றது ஏன்?
செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,என் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது வீடியோவில் உள்ளது . ஆனால் 2 மணி நேரம் கழித்து மனுவை நிராகரித்துள்ளனர். நான் மிரட்டியதால் முதலில் எனது மனுவை ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார். அது எப்படி ஒரு அரசு அதிகாரியை நான் மிரட்ட முடியும்?

இப்படியாகிவிட்டதே
இந்த விசயத்தினை இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் நான் கொண்டு செல்வேன்.
நான் தேர்தலில் போட்டியிடுவது, போட்டியிடாதது பிரச்சினையில்லை. ஆனால் ஜனநாயகத்தில் நிலை இப்படியாகிவிட்டதே என்பதுதான் வேதனை. ஜனநாயகம் மிக கீழான நிலைக்கு சென்று விட்டது என்றும் விஷால் கூறினார்.

விஷால் மனு நிராகரிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த 2ஆம் தேதி அறிவித்தார் விஷால். அது முதலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த போதே அவருக்கு ஏழரையாகத்தான் இருந்தது. எப்படியோ சில மணிநேரங்கள் காத்திருந்து மனுதாக்கல் செய்தார்.

மணிக்கு மணி பரபரப்பு
செவ்வாய்கிழமையன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது மணிக்கு மணி பரபரப்பு ஏற்பட்டது. விஷாலின் மனு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் நிராகரிக்கப்பட்டது. 8 மணியளவில் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரவு 11 மணியளவில் நிராகரிக்கப்பட்டது. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் கடைசி நிமிடம் வரை முட்டி மோதி விட்டார் விஷால்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
ஆனால் விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் டிசைன் அதை அவரால் மாற்ற முடியுமா என்ன? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷால். ஆர்.கே. நகரில் அனுபவம் கொள்முதல். அடுத்தமுறை மிரட்டினாலும் மனம் மாறாதவர்களை முன்மொழிய வைக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications