கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்து விட்டதா? ஒன் இந்தியாவின் மெகா சர்வே முடிவுகள்
கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதாக என்று ஒன் இந்தியா நடத்திய மெகா சர்வேயின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
சென்னை: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாத நோட்டுக்களாக மத்திய அரசு அறிவித்தது. இது எந்த அளவிற்கு கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டது என்று வாசகர்களிடம் ஒன் இந்தியா சர்வேயின் முடிவுகள் இதோ.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி என மொத்தம் 8 மொழிகளில் ஒன்இந்தியா வெப்சைட் மூலம் மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு சர்வே நடத்தப்பட்டது.
ஒன்இந்தியா நடத்திய சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் முடிவுகளைப் பார்ப்போம்.

ஒன்இந்தியாவின் 11 கேள்விகள்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக ஒன்இந்தியா 11 கேள்விகளை தயார் செய்து வெப்சைட் வாசகர்களிடம் முன் வைத்தது. இந்த சர்வேயில் 8 மொழிகளிலும் சேர்ந்து 31,198 பேர் சர்வேயில் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். தமிழ் மொழியில் மட்டும் மிக அதிகபட்சமாக 24,322 பேர் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய நோட்டுக்களோடு அரசு தயாராக இருக்க வேண்டாமா?
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாகவே கூடுதலாக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து தயாராக வைத்திருக்க வேண்டாமா என்ற கேள்விக்கு, 59.3 சதவீதம் பேர் முன்பாக புதிய ரூபாய் நோட்டுக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 40.7 சதவீதம் பேர் வேண்டியதில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சாமானியர்களுக்கு ரூபாய் ஒழிப்பு உதவியுள்ளதா?
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு சாமானிய மக்களுக்கு எந்த அளவிற்கு உதவி கரமாக இருந்துள்ளது என்று ஒன்இந்தியா எழுப்பிய கேள்விக்கு, எந்த வகையிலும் உதவவில்லை என்று 40.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானியர்களுக்கு இது உதவியாக இருக்கிறது என்று 59.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்து விட்டதா?
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்துவிட்டதா என்ற கேள்விக்கு, `ஆம்` என்று 54.3 சதவீதம் பேரும், `இல்லை` என்று 45.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications