'ஒன்இந்தியா' மெகா சர்வே: மக்கள் மறதியால் மோடிக்கு ஆதாயம்.. ஓட்டு போடும்போது வராது நோட்டு பிரச்சினை
சென்னை: ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் உத்தரவு குறித்து மாபெரும் ஆன்லைன் சர்வே நடத்தியது 'ஒன்இந்தியா'.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி மொழி ஒன்இந்தியா வெப்சைட் வாசகர்கள் இக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தனர். 31198 பேர் வாக்களித்ததன் மூலம், ஆன்லைன் வாக்களிப்பில் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது இந்த கருத்துக் கணிப்பு.

ரூபாய் ஒழிப்பு தொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து ஒன் இந்தியா தமிழ் சர்வே நடத்தப்பட்டது. ரூபாய் ஒழிப்பு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ற பெயரில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் ஒரு கேள்விதான், ரூபாய் நோட்டு அறிவிப்பு, சட்டசபைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதாகும். என்ற கேள்விக்கு 3 விடைகள் கொடுக்கப்பட்டன.
பாஜகவுக்கு லாபம், தோல்வி மற்றும் பாதிப்பு இருக்காது என்பதே அந்த மூன்று விடைகளுமாகும். இதில் பாஜகவுக்கு லாபம் கிடைக்கும் என, 36.9% பேர் கருத்து கூறியிருந்தனர்.
பாஜகவுக்கு தோல்விதான் என்று 20.3% பேர் கூறியிருந்தனர். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த விஷயம் தேர்தலில் பாதிப்பை சுத்தமாக ஏற்படுத்தாது என்றுதான் அதிகம் பேர் வாக்களித்தனர். இந்த கருத்துக்கு 42.8% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதாவது வாக்களித்ததில் 11464 பேர் இந்த ஆப்ஷனைத்தான் தேர்ந்தெடுத்தனர். இதற்கு காரணம், மக்கள் பொதுவாக உடனே மறக்க கூடியவர்கள். தேர்தல் வரும்வரை இந்த விஷயத்தை நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்பதாகும்.












Click it and Unblock the Notifications