மாறி வரும் தட்பவெட்ப நிலை… கொசு தொல்லை அதிகரிப்பு.. தூத்துக்குடியில் டெங்கு பரவும் அபாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் தட்பவெட்ப நிலை அடிக்கடி மாறி வருவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பல பகுதிகளில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதூர் டாக்டர் பெருமாள் சித்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்தல், பழைய டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை சுகாதார துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
நெல்லை பகுதியிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பகுதியில் ரெவரண்ட் பாஸ்கரன் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.டாக்டர் பெருமாள் சித்த மருத்துவமனையில் டிசம்பர், ஜனவரி மாதம் முழுவதும் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என்று டாக்டர் சுரேஷ் கார்த்திக் பாபு தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்தை நகரின் பல பகுதிகளில் விரிவுபடுத்தி நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications