ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது் -டிஜிபி அசோக் குமார்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்று டிஜிபி அசோக்குமார் மாவட்ட எஸ்.பிக்களுக்கு சர்க்குலர் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நேற்று விதித்துள்ள இடைக்காலத் தடை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தென் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடு பிடி வீரர்களும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இரவு பகலாக அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தடையை நீக்க கோரி, கடை அடைப்பு, சாலை மறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு கூடிய நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஜல்லிக்கட்டு வீரர்களும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்று டிஜிபி அசோக்குமார் மாவட்ட எஸ்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வாடிவாசல் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு நிலவுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications