தர்மபுரியில் கனமழை... அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8ம் வகுப்பு மாணவன் பலி
தர்மபுரி: தர்மபுரியில் கனமழையால் அறுந்து விழுந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்த பள்ளி மாணவன் உடல் கருகி உயிரிழந்தான்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநத்தம்பட்டி கிராமத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கோவிந்தன் என்பவரின் வீட்டின் முன்பு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.

எதிர்பாராத விதமாக கோவிந்தனின் 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜீத்குமார் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அஜீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையைப் போலவே சேலம், நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. இதனால் அப்ப்குதிகளில் பாக்கு மரங்கள் மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்தன.
எனவே, அப்பகுதி விவசாயிகள் தற்போதைய மழை பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications