தர்மபுரியில் தம்பதியின் படுக்கையறைக்குள் பாய்ந்த வெளிச்சம்.. ஜன்னல் அருகில் பதறியடித்து ஓடிய உருவம்
தர்மபுரி: வாடகைக்கு குடியிருந்தவரின் படுக்கையறையில் பேனா கேமரா வைத்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நினைவிருக்கிறதா? அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் ப்ரைவேட் வீடியோக்கள், பேனா கேமராவில் இருப்பதாக போலீசாரும் அப்போது கூறியிருந்தனர்.. இந்நிலையில், தர்மபுரியில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது.. சென்னை: ராயபுரத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று, தன்னுடைய படுக்கை அறையின் மறைவான இடத்தில் பேனா ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.. அதை எடுத்து பார்த்தபோது அதில் சிறிய அளவில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அப்பெண், தனது கணவருக்கு தெரிவித்தார். அவர் அந்த பேனாவை ராயபுரம் போலீசில் ஒப்படைத்து, அதுகுறித்து புகார் அளித்தார்.
உடை மாற்றும் வீடியோ
இதுசம்பந்தமாக சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன், பேனாவிலிருந்த கேமராவையும் ஆய்வு செய்தனர்..
அதில், அந்தப் பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோக்கள் இருந்தன,.. இதையடுத்து, கேமராவை படுக்கை அறையில் வைத்தது யார் என போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மகனும், முதுநிலை பல் மருத்துவ மாணவருமான இப்ராஹிம் (36) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
வாடகை வீடு என்பதால் அந்த வீட்டின் இன்னொரு சாவி, வீட்டின் ஹவுஸ் ஓனரிடம் இருந்துள்ளது. அதன்மூலம் யாரும் இல்லாத நேரத்தில் கதவைத் திறந்து, படுக்கை அறையில் பேனா கேமராவை இப்ராஹிம் வைத்ததும் அம்பலமானது.. இதையடுத்து பல் மருத்துவ மாணவரை போலீஸார் கைது செய்திருந்தனர்..
படுக்கையறையில் தம்பதி
இந்நிலையில், இதே போன்ற சம்பவம் மீண்டும் தர்மபுரியில் நடந்திருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென படுக்கை அறைக்குள் வெளிச்சம் வந்துள்ளது.. அதாவது வெளிப்பகுதியிலுள்ள ஜன்னலின் மேல் பகுதியில் இருந்து, இந்த வெளிச்சம் வந்திருக்கிறது.. ஜன்னலின் அருகில் நின்றிருந்த ஒருவர், தன்னுடைய செல்போன் மூலம் படுக்கை அறையில் இவர்களை படம் பிடித்தவாறு இருந்துள்ளார்..
கண்ணில் பட்ட வெளிச்சம்
வெளிச்சம் கண்ணில் பட்டதால் திடுக்கிட்டு எழுந்த இளைஞர் உடனடியாக வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தார்... அப்போது ஒருவர் அங்கிருந்து விழுந்தடித்து கொண்டு ஓடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி கேமராவை இளைஞர் ஆய்வு செய்தார்..
அப்போது செல்போனில் வீடியோ எடுத்த நபர் கார்த்திக் என்பது தெரியவந்தது... உடனே இளைஞர் இதுகுறித்து, கார்த்திக்கிடம் சென்று கேள்வி எழுப்பியதுடன், கார்த்திக்கின் செல்போனையும் வாங்கி பார்த்தார்.. அதில், இளைஞரின் படுக்கையறை காட்சிகள் நிறைந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷன்
உடனே கார்த்திக், "இதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, அதையும் மீறி சொன்னால், உன் படுக்கையறை காட்சிகளை சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவேன்" என்று மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த இளைஞர், உடனடியாக பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக்கை கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கு 36 வயதாகிறது.. பாலக்கோட்டை சேர்ந்தவர்.. வீடு, மனை புரோக்கராக உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications