கடமை செய்ய வந்தது குற்றமா? எஸ்எஸ்ஐ, விஏஓ, சர்வேயர் முகத்தில் சாணியை கரைத்து ஊற்றிய தாய்-மகள்.. ஷாக்
தர்மபுரி: தர்மபுரி அருகே பணி செய்ய சென்ற எஸ்எஸ்ஐ, சர்வேயர் உள்ளிட்டோர் மீது தாயும், மகளும் சேர்ந்து சாணியை கரைத்து ஊற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாலம்மாள். இவரது அக்காள் பெயர் முனியம்மாள். சாலம்மாளுக்கு சொந்தமான 85 சென்ட் நிலம் உள்ளது.

இதில் 5 சென்ட் நிலத்தை முனியம்மாள் தனது மகள் மாதம்மாள் ஆகியோருடன் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் சாலம்மாள் ஆவணங்களில் உள்ளது போல் தனது நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி தாசில்தாரிடம் மனு செய்தார். இதையடுத்து நிலத்தை அளவீடு செய்ய விஏஓ மாதேஷ், நிலஅளவையர் ஜோதி உள்ளிட்டோர் தண்டுகாரம்பட்டி கிராமத்துக்கு சென்றனர். இவர்களின் பாதுகாப்புக்காக தொப்பூர் எஸ்எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் சென்றனர்.
இந்த வேளையில் நிலத்தை அளவீடு செய்ய முனியம்மாள் மற்றும் மாதம்மாள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கே நிலத்தை அளவீடு செய்தால் நிலம் பறிப்போய் விடும் என அவர்கள் நினைத்து கடும் கோபத்தை ஏற்படுத்தினர். அதிகாரிகளை அங்கிருந்து செல்லும்படி அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரிகள் மறுத்தனர். அதோடு தண்டுக்காரம்பட்டி ஏரி அருகே உள்ள சாலம்மாளின் நிலத்தை அளப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த முனியம்மாள், மாதம்மாள் ஆகியோர் சாணியை கரைத்து விஏஓ மாதேஷ், சர்வேயர் ஜோதி மற்றும் எஸ்எஸ்ஐ சரவணன் உள்ளிட்டோரின் முகத்தில் ஊற்றி அட்டூழியம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து சர்வேயர் ஜோதி தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரை தொடர்ந்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கப்பதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications