உங்களுக்கு வேறு வேட்பாளரே கிடைக்கவில்லையா.. திமுகவினருக்கு தயாநிதி அழகிரி தடாலடி கேள்வி
மதுரை: இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இதனிடையே, அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி, சரவணனை வேட்பாளராக அறிவித்ததை டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
"இடைத் தேர்தலில் போட்டியிட, சரவணனைவிட நல்ல வேட்பாளர், மதுரை திமுகவில் இல்லை என்பதை அறியும்போது, கவலையாக உள்ளது. #காசுபணம்துட்டுமணிமணி" இவ்வாறு ஆங்கிலத்தில் டிவிட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி.
இதன்மூலம், இடைத்தேர்தலில் சரவணன் வெற்றிக்கு மறைமுகமாக கூட அழகிரி உதவப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
டாக்டர் சரவணன், முன்பு அழகிரி ஆதரவாளராக இருந்தவர். இதன்பிறகு பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியமாகிய சரவணன், ஸ்டாலின் வழியாக திமுகவில் இணைந்தவர். அந்த அதிருப்தியை தயாநிதி அழகிரி இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.