தனக்கென யாரை சம்பாதித்தார் ஜெயலலிதா?
தன்னுடைய 68 வருட வாழ்நாளில், தன்மீது உண்மையான நேசத்துடன் இருக்கும் உறவு என்று யாரையாவது ஜெயலலிதா சம்பாதித்திருக்கிறாரா என்று அவர் உயிருடன் இல்லாத 69ஆவது பிறந்தநாளில் கேள்வி எழுகிறது
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது இந்த பிறந்தநாளில் அவர் எந்த கட்சிக்காக உழைத்தாரோ அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டு உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 69 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 'மாரடைப்பு' ஏற்பட்டு மறைந்துவிட்டார். செப்டம்பர் 6ஆம் தேதி அவரது பூத உடல் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிர் தோழி
ஜெயலலிதாவின் உயிர்தோழியாக 33 வருடங்கள் கூடவே இருந்து 33 பிறந்தநாளையும் உற்சாகமாகவும் சந்தோஷத்துடனும் கொண்டாடிய சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். 'இந்த பிறந்தநாளில் என் எண்ணம் முழுவதும் அவரை பற்றிய நினைவுகளில் உள்ளது' என்று சசிகலா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியும், பதவியும்
ஆனால், சசிகலா ஜெயலலிதா இறந்த 30 நாட்கள் முடிவடைவதற்கு முன்பே ஜெயலலிதாவைப் போல் ஆடை, அலங்காரம் செய்துகொண்டு தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கிக் கொண்டார். ஒருவர் இறந்த 30ஆவது நாள் இந்துக் குடும்பங்களில் துக்கம் அனுசரிப்பது வழக்கம். ஆனால், ஜெயலலிதா மறைந்த 30ஆவது நாள் அன்று 33 வருடங்கள் கூடவே இருந்த உயிர்த்தோழி சசிகலா அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக, மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவின் உறவுகள்
ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகள் தீபக் மற்றும் தீபா ஆகிய இருவரும்தான். அவர்களில் தீபா, இன்று ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அவரும் ஜெ.யின் புகழ் வெளிச்சத்தையும் அரசியலையும் தனதாக்கிக்கொள்ளவே முயன்று வருகிறார்.
தீபக், இத்தனை நாள் அமைதியாக இருந்தவர் நேற்று 'போயஸ்கார்டன் உள்பட என் அத்தையின் பெயரில் உள்ள சொத்துக்கள் எனக்கும் என் அக்காவுக்கும்தான் வேண்டும்' என்று திடீரென பேட்டி கொடுத்துள்ளார். ஜெ.வுக்கென இருக்கும் உறவுகள் அவருடைய கட்சியையும், சொத்தையும் கைப்பற்றுவதில்தான் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் அமைச்சர்கள்
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த வருடம் கூட 68 கிலோ கேக் வைத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி வெட்டி, கோகுல இந்திராவுக்கு ஊட்டிவிட்டார். 67ஆவது பிறந்தநாளில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோயிருந்த சூழ்நிலையிலும் கூட, அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் 67 கிலோ கேக் வெட்டினார் வளர்மதி. லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால், இன்று அவர்கள் 'ஜெயலலிதா உயிருடன் இல்லை, அவரது கண்பார்வை தன் மீது படப்போவதில்லை, புதிய பதவிகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை' என்பதால் அடக்கியே வாசிக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் உறவுகள்
ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகள் தீபக் மற்றும் தீபா ஆகிய இருவரும்தான். அவர்களில் தீபா, இன்று ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அவரும் ஜெ.யின் புகழ் வெளிச்சத்தையும் அரசியலையும் தனதாக்கிக்கொள்ளவே முயன்று வருகிறார்.

சொத்தை கைப்பற்றுவதில்தான் போட்டி
தீபக், இத்தனை நாள் அமைதியாக இருந்தவர் நேற்று 'போயஸ்கார்டன் உள்பட என் அத்தையின் பெயரில் உள்ள சொத்துக்கள் எனக்கும் என் அக்காவுக்கும்தான் வேண்டும்' என்று திடீரென பேட்டி கொடுத்துள்ளார். ஜெ.வுக்கென இருக்கும் உறவுகள் அவருடைய கட்சியையும், சொத்தையும் கைப்பற்றுவதில்தான் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு உறவைக் கூட சம்பாதிக்கவில்லையா?
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் பூத உடல் கிடத்தப்பட்டிருந்த போது, 'ஐயோ அம்மா' என்று உண்மையான அன்புடனும் இழப்பின் வலியுடனும் அழுத தொண்டர்கள் மட்டுமே இன்று ஜெயலலிதாவை அதே பாசத்துடன் நினைத்துப் பார்க்கிறார்கள். தன்னுடைய 68 வருட வாழ்க்கையில் தனக்கென உருகும் ஒரு உறவைக் கூட ஜெயலலிதா சம்பாதிக்கவில்லையா?












Click it and Unblock the Notifications