ஜெ., எப்போது இறப்பார் என்று ஓபிஎஸ் காத்திருந்தாரா? - தம்பித்துரை

ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் காத்து இருந்தாரா? என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா இறுதிச்சடங்கு முடியும் முன் பன்னீர்செல்வம் பதவி ஏற்றதன் மர்மம் என்ன? ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என காத்து இருந்தாரா? என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு தகவல்களை அவதூறாக பரப்பி வருகிறார் என்றார்.

Did OPS wait for the death of Jayalalitha, asks Thambidurai

ஜெயலலிதா இறுதிச்சடங்கு முடியும் முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றதன் மர்மம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்றும் கூறினார். ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என காத்து இருந்தாரா? என்றும் தம்பித்துரை கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை பன்னீர்செல்வம் கூட்டியது ஏன்? எம்.எல்.ஏ.க்களிடம் அவசர அவசரமாக இவர் கையெழுத்து வாங்கியது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்றும் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+