2016 ஆர்.கே நகர் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
2015ல் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற்று முடிந்து இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் இருக்கிறது.
சென்னை: 2015ல் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற்று முடிந்து இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் இருக்கிறது. சென்ற தேர்தலில் முக்கிய இடம் பிடித்த கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை தேர்தலில் நிற்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015ல் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை அடைந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2015 ஜூன் மாதம் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவர் மரணத்தை அடுத்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.

2015 ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொடக்கத்தில் இருந்து ஜெயலலிதா முன்னிலை வகித்து வந்தார். இந்த தேர்தலில் அவர் 1,60,921 பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக சிபிஐ கட்சியை சேர்ந்த மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்றார்.
இந்த தேர்தலை பல முக்கிய கட்சிகள் புறக்கணித்து இருந்தது. ஆனால் சிபிஐ கட்சி மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை அப்படியே தலைகீழாக நடந்து இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில் மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடுகிறது.
சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில்தான் அதிக சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். அதேபோல் சென்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெறும் என்று பலரும் முன்பாகவே கணித்து இருந்தனர். இந்த தேர்தலில் தற்போது திமுக, தினகரன், அதிமுக கட்சிக்கு இடையில் மும்முனை போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications