அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தினகரன் தரப்பு வழக்கு?
அதிமுக பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தரப்பு வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னையில் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தினகரன் தரப்பு வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் செப்டம்பர் 12-ந் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அப்பொதுக் குழுவில் பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஆனால் தினகரன் தரப்பு இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்க்கிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்கிறது தினகரன் தரப்பு. அதேநேரத்தில் அதிமுக சட்டவிதிகளின்படி, பொதுச்செயலர் செயல்படாத நிலையில் முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என்கிறது எடப்பாடியார் தரப்பு.
இந்த நிலையில் தினகரன் தரப்பினர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.