எட்டப்பர்களாகவும் கட்டப்பாக்களாவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் சரித்திரத்தில் நிற்பார்கள்- தினகரன்
எடப்பாடியும் பன்னீர் செல்வமும் கட்டப்பாக்களாகவும், எட்டப்பர்களாகவும் சரித்தரத்தில் இடம் பிடிப்பர் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video
திருச்சி: 18 எம்எல்ஏக்கள் கடிதம் அளித்த விஷயத்தில் ஆளுநர் நடுநிலை தவறினால் அது மத்திய அரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் நேற்று தகுதிநீக்கம் செய்தார். இதுகுறித்து திருச்சியில் அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் நடுநிலை தவறினால் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்படும்.
நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எட்டப்பர்களாகவும், கட்டப்பாக்களாகவும் சரித்தரத்தில் நிற்பர். போலீஸ் நடுநிலை தவறக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
தமிழக மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம். தமிழகத்தில் நடப்பதை இந்தியாவே உற்று நோக்கிப் பார்க்கிறது.
திமுகவுடன் எனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. மருத்துவராக இருந்த தமிழிசை எப்போது வக்கீலானார் என தெரியவில்லை. மத்திய அரசை கண்டு நான் பயப்படுவதாக சொல்வதில் நியாயம் இல்லை என்றார் தினகரன்.