தினகரனுக்கு கை கொடுக்கும் எடியூரப்பா வழக்கு தீர்ப்பு! பாயிண்ட்டை பிடித்த தவே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் செயல்பட்டதை போலவே தமிழகத்திலும் செயல்பட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தினகரன் அணி தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்துள்ளதாகவும், சபாநாயகர் ஒரு கட்சியை சேர்ந்தவர் போல நடந்துகொண்டதாகவும் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

 Dinakaran faction MLAs gets support from Yeddiyurappa case

குறிப்பாக கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்றதையும், அவர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிருப்தி வேறு கட்சித் தாவல் வேறு என்பதை எதியூரப்பா வழக்கு தீர்ப்பு மூலம் சுட்டி காட்டினார் தவே.
எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடிதம் போல தினகரன் எம்.எல்.ஏக்கள் கடிதம் எழுதினர் என்றும்,18 எம்.எல்.ஏக்களுக்கும் அரசுக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை என்றும் தவே தெரிவித்தார். எடப்பாடிக்கு பதிலாக வேறு முதல்வரை தேர்வு செய்தால் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளபோது கட்சித் தாவல் எப்படி பொருந்தும் என்றும் தவே கேள்வி எழுப்பினார்.

எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தை போலவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் கடிதம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+