For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசை தாக்கிய வழக்கு-வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் முன் ஜாமீன் கோரி மனு

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமறைவான வெற்றிவேல் முன் ஜாமீனுக்கு முயற்சி- வீடியோ

    சென்னை: தலைமை செயலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமறைவாக உள்ளார். அவருடன் தங்க தமிழ்ச்செல்வனை போலீஸ் தீவிரமாக தேடி வரும் நிலையில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தலைமை செயலக வளாகத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வெற்றிவேல். அதேபாணியில் அரசு மீது புகாரை தெரிவிக்க நேற்று தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் வெற்றிவேல் இருவரும் தலைமை செயலகம் வந்தனர்.

    Dinakaran Supporter Vetrivel Vetrivel goes into hiding

    தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்ட எம்.எல்.ஏக்கள் என்பதால் இருவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. போலீசாரின் தடையை மீறி செய்தியாளர்களை தலைமை செயலகத்தில் இருவரும் சந்தித்தனர்.

    இதனால் அரசு ஊழியர்களை பணிசெயய் விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும் தலைமறைவாகிவிட்டனர்.

    தலைமறைவாகி உள்ள இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    English summary
    Dinakaran Supporter and disqualified AIADMK MLA Vetrivel is reportedly absconding to evade police arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X