போலீசை தாக்கிய வழக்கு-வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் முன் ஜாமீன் கோரி மனு
தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை: தலைமை செயலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமறைவாக உள்ளார். அவருடன் தங்க தமிழ்ச்செல்வனை போலீஸ் தீவிரமாக தேடி வரும் நிலையில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தலைமை செயலக வளாகத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வெற்றிவேல். அதேபாணியில் அரசு மீது புகாரை தெரிவிக்க நேற்று தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் வெற்றிவேல் இருவரும் தலைமை செயலகம் வந்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்ட எம்.எல்.ஏக்கள் என்பதால் இருவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. போலீசாரின் தடையை மீறி செய்தியாளர்களை தலைமை செயலகத்தில் இருவரும் சந்தித்தனர்.
இதனால் அரசு ஊழியர்களை பணிசெயய் விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும் தலைமறைவாகிவிட்டனர்.
தலைமறைவாகி உள்ள இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications